நிதி பரிவர்த்தனைகள் அறிக்கை சட்டத்தின் விதிகளுக்கு இணங்காத இலங்கையின் ஐந்து வங்கிகளுக்கு நிதி அபராதம் !

Tuesday, December 13th, 2022

இலங்கை மத்திய வங்கி 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதி பரிவர்த்தனைகள் அறிக்கை சட்டத்தின் (FTRA)விதிகளுக்கு இணங்காத ஐந்து வங்கிகளுக்கு நிதி அபராதம் விதித்துள்ளது.

டீஎஃப்சிசி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதமாக வசூலிக்கப்பட்ட பணம் ஒருங்கிணைந்த நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: