பூட்டிய வீட்டில் வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு!

Wednesday, December 1st, 2021

யாழ்ப்பாணம், தென்மராட்சி – தனங்கிளப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றையதினம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வெளியேறியதை அடுத்து அயலவர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பொலிஸார் வீட்டை உடைத்து பாரத்த போது ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டிருந்தது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் –

சடலமாக காணப்பட்ட நபர் புத்தூர் வடக்கு, புத்தூரை சேர்ந்த 51 வயதான சுப்பிரமணியம் – சிவபாலன் என அடையாளம் காணப்பட்டிருந்தது.

இவர் வலி. கிழக்கு பி.ச. உறுப்பினர் எனவும் வலி. கிழக்கு பி.ச. பட்ஜட் அமர்வு தொடர்பில் தகவல் தெரியப்படுத்து தொடர்பு கொண்ட போதிலும் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்ததாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சடலம் இன்று நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு மீட்கப்பட்டு மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts: