வடமராட்சி கிழக்கில் அதிகாலை கடற்படையினர் திடீர் சோதனை – 239 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர கைது!

Monday, March 22nd, 2021

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைதுசெய்யப்பட்ட இருவரிடமிருந்து 239 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.

யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் அதிகாலை 3 மணியளவில் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும்  இந்த சோதனை நடவடிக்கையின் போது, மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளையும், சந்தேக நபர்களையும் பளை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதுடன் நீதிமன்றில் அது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும் பளை பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: