தொற்றா நோய் தொடர்பான சர்வதேச மாநாடு ஜனாதிபதி தலைமையில்!
Saturday, March 31st, 2018
சார்க் பிராந்திய நாடுகளை உள்ளடக்கிய தொற்றா நோய் தொடர்பான விசேட சர்வதேச மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த மாநாட்டின் பிரதான நோக்கம் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதேயாகும். இந்த மாநாட்டில் சார்க் பிராந்திய நாடுகளில் தொற்றாநோய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் பரிமாறிக் கொள்ளப்படவுள்ளது.
தொற்றா நோய்களாக மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு உட்பட பல நோய்கள் கருதப்படுகின்றன. 2025ஆம் ஆண்டில் தொற்றா நோய் தாக்கத்தை 25 வீதம் வரை குறைப்பதில் விசேட கருத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்
Related posts:
துண்டாடப்பட்ட கரத்தை இணைத்த வைத்தியர்கள்!
பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது - சட்...
கப் ரக வாகனமும் - மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து - கொடிகாத்தில் ஒருவர் பலி!
|
|