சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் நீக்கப்படும் என தகவல்!

Sunday, December 3rd, 2023

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக நீக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தற்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் தடையை நீக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இது தொடர்பிலான கலந்துரையாடலுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்று சபைக்கு புதிய விளையாட்டு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: