பூரண கொவிட் தடுப்பூசி தொடர்பான வர்த்தமானி இரத்து – சுகாதார அமைச்சு தகவல்!
Monday, May 2nd, 2022பூரண கொவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, ஏப்ரல் 30 ஆம் திகதிமுதல் முழுமையாக தடுப்பூசி போடப்படாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடை செய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
எவ்வாறாயினும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நேற்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்ய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, முன்னர் வெளியிடப்பட்ட 2264/09 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 101வது உத்தரவு, சுகாதார அமைச்சரினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
தொண்டமானாறு கலைவாணி சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!
கழிவு முகாமைத்துவம் தொடர்பில் விசேட நிலையம்!
முட்டை உற்பத்தியாளர்கள் நெகிழ்வுப் போக்கை காட்டினால் இறக்குமதி நிறுத்தப்படும் - அமைச்சர் நளின் தெர...
|
|