நாளைமுதல் நெடுந்தூர போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படும் – யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு!
Sunday, February 28th, 2021யாழ்ப்பாண நகர பகுதியில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் நெடுந்தூர போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பஸ்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியால் உள் நுழைவது மற்றும் வெளிச்செல்வது மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது
மக்கள் நலன்கருதிய குறித்த நடைமுறைகளை மீறுவோர் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுந்துர பேருந்து நிலையத்திற்கு சென்று தமது பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுதந்திரமான அமைதியான சமூக வாழ்விற்கு பாதிப்பை ஏற்படுத்தும் குழுக்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு செயலாள...
தடுப்பூசி ஊடாக மாத்திரமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் - ஜனாதிபதி தெரிவிப்பு!
40 ஆயிரம் ஹெக்டயார் நிலப்பரப்பு தொடர்பில் வெளியாகிறது வர்த்தமானி – கையொப்பமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசி...
|
|