மோட்டார்ச் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்: யாழில் இருவர் காயம்
Saturday, August 12th, 2017வீதியால் மோட்டார்ச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவர் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தியதில் அவர்களிருவரும் காயமடைந்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை(11) மாலை-04 மணியளவில் யாழ். கைதடி மானிப்பாய் வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். கைதடி மானிப்பாய் வீதியால் மோட்டார்ச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் கைதடி மேற்குப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தரொருவரும், 24 வயதுடைய இளைஞரொருவரும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸா ர் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
நிதி மோசடி செய்த பெண் கைது!
அமரர் ஆனந்தராஜா ரவீந்திரராஜாவுக்கு ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட பிரதிநிதி இறுதி அஞ்சலி!
பொறுப்புக்கூறலை மையைமாக கொண்டு நல்லிணக்கம் - பிரதமர் !
|
|
நிலவும் அசாதாரண நிலைமைகளால் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - பெற்றோல...
டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் 25,000 அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு - பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மாய...
போதைப்பொருள் தொடர்பில் தகவல்கள் இருந்தால் மட்டுமே பாடசாலை மாணவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் ...