தொடர்ச்சியாக உதவிகளை பெற்றுத்தான் வாழ வேண்டும் என்கின்ற நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் -. அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவிப்பு!

Monday, March 27th, 2023

வறிய மக்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் மாவட்ட மட்ட நிகழ்வு யாழ்.நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவும் இந்த பொருளாதார நெருக்கடி நிமிர்த்தமாக குறைந்த வருமானம் பெருகின்ற வறுமைக்குள் உள்ளாகி இருக்கின்ற குடும்பங்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணமாக ஜனாதிபதியின்  யோசனைகளுக்கு அமைய இந்த திட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்த நாட்டு விவசாயிகளுடைய நெல்லை கொள்வனவு செய்து அந்த நெல்லை ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய வறுமைக் கோட்டுக்குள் இருக்கின்ற குடும்பங்களுக்கு ஆகக் குறைந்தது இரண்டு தடவைகள் அவற்றை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கு அமைய அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய அரசாங்க அதிபர்கள் அந்தந்த மாவட்டங்களில் விளைந்திருக்கின்ற நெல்லை கொள்வனவு செய்து அந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய குடும்பங்களுக்கு அரிசியாக மாற்றி விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழ் மாவட்டத்தில் சுமார் 45,000 ஹெட்டயர் வயல்நிலம் இருக்கின்ற போதும் எங்களுக்கு 300 ஹெட்டயர் நெல்லை கொள்வனவு செய்ய முடியும் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் எங்களுக்கு 25 ஹெட்டயர் நெல்லை கூட கொள்வனவு செய்ய முடியாது போயிருந்தது.

அதனால் நாங்கள் ஏனைய மாவட்டங்களில் இருந்து கொள்வனவு செய்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கு அமைய தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அரிசி கிடைக்கப்பெற்று இருக்கிறது. இதன் மிகுதித்தொகை வவுனியா மாவட்டத்திலிருந்து கிடைக்க இருக்கின்றது.

தொடர்ச்சியாக இவ்வாறான உதவிகளை வழங்கித்தான் நாங்கள் வாழ வேண்டும் என்கின்ற நிலை இருக்கக்கூடாது. நாங்கள் என்னென்ன தொழிலை மேற்கொள்ளுகின்றோமோ அவற்றுள் மிக சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

நாங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே என்ற அடிப்படையில் குடும்பங்களை தெரிவு செய்து இருந்தாலும் எங்களுடைய ஒவ்வொரு குடும்பமும் செலவு செய்கின்ற செலவினங்களை பார்த்தால் நாங்கள் அந்த வறுமையில் இருந்து ஓரளவு விடுபட முடியும் என நான் நம்புகின்றேன்.

இங்கிருக்கின்ற அநேகமாணவர்களிடம் கை தொலைபேசி இருக்கும் ஒரு குடும்பத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கைத்தொலைபேசி இருக்கும் அந்த கைத்தொலைபேசிக்கு மாதமாதம் செலவழிக்கின்ற காசு எவ்வளவு என்று எண்ணிப் பார்த்தோமாக இருந்தால் அதில் 50% சேமிக்க முடியுமாக இருந்தால் எங்களுக்கு ஒரு 20 கிலோ அரிசி வாங்க முடியும்.

இவ்வாறு பல அனாவசியமான செலவுகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் எங்களுடைய நாடு மிக நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கின்றது. நாங்கள் எல்லாவற்றிக்கும் அரசாங்கத்தினுடைய கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எங்களிடத்தில் என்ன வளங்கல் இருக்கிறதோ அந்த வளங்களை மிக உச்ச அளவில் பயன்படுத்தி முதலில் எங்களுடைய அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்கு நாங்கள் முயற்சி எடுக் வேண்டும்.

அரசாங்கம் அதைத் தரவில்லை இதைத் தரவில்லை என்ற குற்றச்சாட்டுதை மட்டும் வாசகமாக வைத்திருப்பதை தவிர்த்து அரசாங்கத்தினுடைய உதவிகளோடு நீங்களும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டமும் ஒரு சிறப்பான திட்டம் விலைவாசிகள் காரணமாக பயிற்செய்கைக்கு தேவையான பசளை விதைநெல் ஏனைய கூலிகள் மிக உயர்ந்த நிலையில் காணப்படுகின்ற போது, காலநிலையும் விவசாயிகளுக்கு பாதகமான சூழ்நிலையில் காணப்படுகின்றது. அவர்கள் மிக கஷ்டப்பட்டு இந்த நெல்லை உற்பத்தி செய்து அதை காய வைக்கின்ற நேரத்தில் கூட மழை பெய்து அதை அழிக்கின்ற நிலையே காணப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு சவால்ளுக்கு மத்தியிலே தங்களுடைய உற்பத்தியை மேற்கொண்ட விவசாயிகள் தங்களுக்குரிய சரியான விலை கிடைக்காமையினால் அவதிப்பட்ட வண்ணம் இருந்தார்கள்

இதனால் அரசாங்கம் ஒரு திட்டத்தை கொண்டு வந்திருந்தது 88 ரூபாவிலிருந்து 100 ரூபாய் வரைக்கும் நெல்உடைய தரத்துக்கு அமைவாக அதனை கொள்வனவு செய்வதாக அறிவித்தது.

இந்த நெல் கோள்வனவினை அந்த அந்த மாவட்டங்களில் இருக்கின்ற அரசாங்க அதிபர்கள்தான் அதனை செய்ய வேண்டும் எனவும், ஏனெனில் அதிலும் கருப்பு சந்தைக்காரர்களுடைய தலையீடு இருக்கக் கூடாது என்பதற்காக.

இதில் இரண்டு விதமான நன்மைகள் இருக்கின்றது ஒன்று விவசாயிகள் தங்களுடைய நெல்லுக்கு போதிய விலையை பெற்றுக் கொள்ளுதல், அதேவேளை தற்காலிகமாக வறுமைக்கு உட்பட்டிருக்கின்ற பொதுமக்கள் தங்களுடைய சிக்கலை தவிப்பதற்கு ஒரு தற்காலிக ஏற்பாடு கிடைக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: