தொடரும் சீரற்ற வானிலை : டெங்கு நோய் பரவும் அபாயம் என எச்சரிக்கிறது தேசிய நோய் தடுப்பு பணியகம்!

Monday, August 3rd, 2020

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 23 ஆயிரத்து 934 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் அருண தெரிவித்துள்ளார்.  

அத்துடன் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, இரத்தினபுரி, கேகாலை, மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயமுள்ளது.

இதனால் பொதுமக்கள் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் வைத்தியர் அருண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: