19 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு !

Monday, April 6th, 2020

கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அமுலாகின்ற ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய 19 மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த பகுதிகளுக்கு மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு மீள அமுலாக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், குறித்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை நீக்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவரும் இந்த பகுதிகளுக்கு உற்பிரவேசிப்பதோ அல்லது அங்கிருந்து வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: