தேவையான அரிசியை நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Monday, January 22nd, 2024
தேவையான அளவு அரிசியை நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்யும் வகையில், நாட்டிற்குள் அதிகளவு அரிசியை உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில், நாட்டின் அரிசி தேவையில் மூன்றில் ஒரு பங்கு இறக்குமதி செய்யப்பட்டது.
இந்தநிலையில், நாட்டுக்குத் தேவையான அரிசியின் அளவு தற்போது நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
விண்ணில் செய்மதி அனுப்புகிறது இலங்கை!
தனிமைப்படுத்தல் மையமாகும் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி - அவசரமாக வெளியேறும் மாணவர்கள்!
நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட "A" பட்டியலும் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பெயர் ப...
|
|
|
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசியை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது - நோய் தடுப்பு பிரிவ...
இலங்கையில் மேலும் 26 கொவிட் மரணங்கள்: 3 மாத குழந்தையும் பலி என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிப்பு!
நாட்டின் சில பாகங்களில் இன்று 100 மில்லமீற்றருக்கும் அதிக பலத்த மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்...


