இலங்கையில் மேலும் 26 கொவிட் மரணங்கள்: 3 மாத குழந்தையும் பலி என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, May 11th, 2021

நாட்டில் நேற்று 26 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது. இநத தகவலை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் இலங்கையில் நாளொன்றில் பதிவான ஆகக்கூடிய கொவிட் மரண எண்ணிக்கை இதுவாகும்.

உயிரிழந்தவர்களில 14 ஆண்களும் 11 பெண்களும், 3 மாத குழந்தையொன்றும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: