தமிழ், முஸ்லீம் மாணவர்கள் மீது   தாக்குதல் குறித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம்!

Monday, August 29th, 2016

கடந்த திங்கட்கிழமை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ், முஸ்லீம் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாகப் பல மாணவர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் குறித்த வன்முறைச் சம்பவத்தினை யாழ். பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பாகக் குறித்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ், முஸ்லீம் மாணவர்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் மீது முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புக்கள் இடம்பெறா வண்ணம் தண்டணைகள் வழங்கப்பட வேண்டும்.

பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்- முஸ்லீம் மாணவர்கள் நீண்ட காலமாகவே கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் சகல தரப்பினரதும் பாதுகாப்புச் சம்பந்தப்பட்ட தரப்பினரால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட மாணவர் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு எட்டப்பட்டது போன்று பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துக்கும் உரிய தீர்வு எட்டப்பட்டு மாணவர்கள் தமது கல்வியைத் தொடருவதற்குச் சகல தரப்பினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆசிரியர் சங்கம் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: