தனியார் பேருந்துகளுக்கு இ.போ.ச வுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
Tuesday, March 1st, 2022
பொது போக்குவரத்தில் ஈடுபடுகின்ற தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நிதியமைச்சர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கனியவள கூட்டுதாபனத்தின் விலையின் கீழ் இவ்வாறு பேருந்துகளுக்கு டீசல் வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பான மதிப்பீட்டு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கைதிகளின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்ததுமுடிவு!
எமது அரசியல் வழிமுறையே யதார்த்தமானது - ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுர...
அமரர் சின்னையா சிகடசுந்தரலிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி...
|
|
|


