அமரர் சின்னையா சிகடசுந்தரலிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை!
Friday, May 15th, 2020அமரர் சின்னையா சிகடசுந்தரலிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் மித்திரன் அவர்களின் தலைமையிலான முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிர செயற்பாட்டாளரான அமரர் சின்னையா சிகடசுந்தரலிங்கம் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை இயற்கையெய்தினார்.
வேலணை பிரதேச சபை உறுப்பினரான சின்னையா சிவராசா (தோழர் போல்) அவர்களின் சகோதரரான அமரர் சின்னையா சிகடசுந்தரலிங்கம் அவர்களின் பூதவுடல் வேலணை அம்பிகைநகரிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இங்கு சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் மித்திரன், கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலும்மயிலும் குகேந்திரன் மற்றும் கட்சியின் யாழ் மாவட்ட பிரதேசங்களின் நிர்வாகச் செயலாளர்கள் உதவி நிர்வாதக செயலாளர்கள் உளிட்ட பல முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|