சுயதொழில் முயற்சியாளர்களுக்கு செயலமர்வு!

Saturday, March 24th, 2018

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பூம்புகார் கிராம சேவையாளர் அலுவலக மண்டபத்தில் சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் செயலமர்வுமனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதன் மூலம் மட்கோ, பாலையூற்று, பூம்புகார் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுயதொழில் முயற்சியாளர்கள் பயனடைந்தனர்.

இந்த செயலமர்வில் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.கருணாகரன், பூம்புகார் கிராம உத்தியோகத்தர் சரோஜினி, மட்கோ, பாலையூற்று, பூம்புகார் பிரிவில் கடமைபுரியும் அபிவிருத்திஉத்தியோகத்தர்களான லோஜினி, திருமதி.சிறிதேவி, திருமதி.சுகுணா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts: