சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கைது!

Monday, August 29th, 2016

திருகோணமலை முகத்துவாரம் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட சிறியரக படகொன்றும், வலைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும், மீன்பிடி உபகரணங்களையும் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts: