PCR பரிசோதனை அறிக்கையில் தாமதம் என பலரப்பினராலும் குற்றச்சாட்டு!

Tuesday, May 18th, 2021

கொரோனா நோயாளர்களை அடையாளம் காண்பதற்காக நடத்தப்படும் PCR பரிசோதனைகளின் அறிக்கைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் கையளிப்பதில் தாமதம் நிலவுவதாக பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் PCR பரிசோதனை நடத்தப்பட்டு 24 மணித்தியாலங்களில் அது தொடர்பான அறிக்கையை பெற்றுக் கொடுப்பதற்கான உரிய திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்க்கது.

Related posts: