குப்பி விளக்கு சரிந்து வீழ்ந்து தீப்பற்றியதில் குடும்பஸ்தர் பலி!
Friday, October 28th, 2016வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் குப்பி விளக்கு சரிந்து வீழ்ந்து தீப்பற்றியதில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் புதன்கிழமை 8 மணியளவில் புனிதநகர் கற்கோவளத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் சின்னக்குட்டி சின்னையா (வயது-65) என்ற குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார்.
முள்ளிவளையில் மகளுடன் வசித்து வந்த இவர் ஆலய திருவிழா ஒன்றுக்காக கற்கோவளம் பகுதிக்கு மனைவியுடன் வந்து தங்கி நின்றுள்ளார். பிரஸ்தாப குடும்பஸ்தர் வீட்டின் அறையில் உறங்கிக் கொண்டிருந்த வேளை அங்கு வைக்கப்பட்டிருந்த குப்பி விளக்கு சரிந்து வீழ்ந்து தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. சம்ப இடத்திற்கு சென்ற மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா மரண விசாரணையை மேற்கொண்டதுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கையினைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மேலதிக விசாரணையினை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
|
|