குடும்பப் பிணக்கு: புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி மரணம்!
Thursday, October 13th, 2016
குடும்பப் பிணக்குக் காரணமாகப் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்று காயமடைந்திருந்த திருநெல்வேலி வளாக வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி) யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மது போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த குறித்த குடும்பஸ்தர் ஏற்கனவே யாழ். போதான வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை குறித்த குடும்பஸ்தர் யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்று யாழ். புங்கன்குளம் பகுதியில் புகையிரதம் முன் பாய்ந்த காரணத்தால் படுகாயமடைந்தார். இதனையடுத்துச் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார்.

Related posts:
யாழில் வாள்வெட்டுக் குழுக்களைத் தேடிப் பொலிஸார் வலைவிரிப்பு!
கொரோனாவுக்கு மத்தியிலும் 2021 ஆம் ஆண்டில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி துறையின் இலக்கை வெற்றிகண...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரை - வரலாற்றில் முதன்முறையாக ஏராளமான மாணவர்களுக்கு கிடைத்த வாய...
|
|
|


