காணி மாவட்ட பதிவக சேவைகள் இரு தினங்கள் இடம்பெறாது

Wednesday, December 28th, 2016

வருட நிறைவுப் பணிகளை முன்னிட்டு எதிர்வரும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் யாழ்ப்பாண காணி மாவட்டப் பதிவகத்தில் விவாக, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளல், மொழிபெயர்ப்பு செயற்பாடுகள் மற்றும் காணி ஆவணங்கள் தொடர்பான கருமபீடங்களில் விண்ணப்பங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் 02ஆம் திகதி தொடக்கம் மீண்டும் காணி மாவட்டப் பதிவகத்தின் அனைத்துப் பணிகளும் வழமைபோல நடைபெறும் எனவும் காணி மேலதிக மாவட்டப் பதிவாளர் கோ.குணாஜினி அறிவித்துள்ளார்.

1268

Related posts: