வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்கு எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்!

Tuesday, August 4th, 2020

யாழ் மாவட்டத்தில் நாளைய தினம் (5) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இடம் பெறுவதோடு மறுநாள் 6 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு யாழ் மத்திய கல்லூரியில்  வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – வாக்களிப்பு நிலையங்களில் காலை வேளையிலேயே மக்கள் வாக்களிக்க செல்வதோடு சுயதனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கும் வாக்களிக்க ஏதுவாக சுகாதார தரப்பினர் அதற்கான ஏற்பாடுகளை மேற் கொள்வார்கள்

புதன்கிழமை (5)  மாலை 5.00 மணியுடன் வாக்களிப்புகள் யாவும் நிறுத்தப்பட்டு வாக்கு பெட்டிகள் யாழ் மத்திய கல்லூரிக்கு பாதுகாப்பாக எடுத்து செல்லப்படுவதோடு கட்சிகள் சுயேட்சை குழுக்கள் அதனை கண்காணிக்க ஏதுவாக குறித்த வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு பின்னால் செல்வதற்குரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்

யாழ் மத்திய கல்லூரியில் முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக அறையினுள் வைக்கப்படும் வாக்கு பெட்டிகளை கண்காணிப்பதற்காக  கட்சிகள் சுயேட்சைக்குழு பிரதிநிதிகள் கண்காணிப்பதற்கு ஏதுவாக வழிவகைகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்

Related posts: