கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்ட இளம் குடும்பஸ்தர் மரணம்!
Saturday, December 1st, 2018
கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி சரிந்து மரணமடைந்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை வல்வெட்டித்துறைப் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆதிகோவிலடி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சாமுவேல் திருக்குமரன் (வயது 34) மயங்கி சரிந்து மரணமடைந்தார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று சென்று சடலத்தை பார்வையிட்ட பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
Related posts:
வியட்நாமில் இரத்தினக்கல் அகழ்வு செய்ய இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்!
டெங்கு நோய்க்கு நிவாரணமளிக்கும் மருந்துகளை இறக்குமதி செய்ய முடிவு!
பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் சுனாமி முன்னெச்சரிக்கை வேலைத்திட்டம்!
|
|