தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!
Wednesday, December 7th, 2016
இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபையால் காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய தொழில் தகைமை கொண்ட தொழில்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், மின் இணைப்பாளர், தையல் பயிற்சி, மோட்டார் சைக்கிள் திருத்துநர், அறை பராமரிப்பாளர், உணவு மற்றும் மென்பானம் பரிமாறுவோர், தச்சுவேலை, காய்ச்சி இணைப்பாளர், கட்டிட உதவியாளர் ஆகிய தொழில்களுக்கான பயிற்சிகள் பயிற்றுவிக்கப்படவுள்ளன. தொழிற் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பங்களை தொழிற்பயிற்சி நிலையம், காரைநகர் என்ற முகவரிக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
நாய் கடிக்கு உள்ளாகி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
நாடு தொடர்பிலான கரிசனையுடன் ஒட்டுமொத்த மக்களும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க ...
நாட்டில் அடிப்படைவாதங்களுக்கு இடமில்லை: அடியோடு ஒழிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலர் தெரிவிப...
|
|