கடற்படை துப்பாக்கி சூடு நடத்தவும் தயார்- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!
Sunday, December 11th, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மீது கடற்படை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை மறுத்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன,பிரச்சினை தொடர்ந்தால் துப்பாக்கிப் பிரயோகம்நடத்தவும் கடற்படையினருக்கு முடியும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
கடற்படை எவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஹம்பாந்தோட்டையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தின் பின்னால் அரசியல் சக்தி செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினர்.
Related posts:
அரசு-தனியார் இணைந்து ஆரம்பித்த முதல் ஆடைத் தொழிற்சாலை திறப்பு!
பிளாஸ்டிக் கூடைகளது பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை!
இலங்கையில் பரவிவரும் கொரோனா தொடர்பான ஆராய்ச்சி ஜூன் மாதம் முதல் வாரத்தில் - கலாநிதி சந்திம ஜீவந்தர வ...
|
|