அரச வேலையை மட்டுமே எதிர்பார்க்கும் இளையோர்!

Wednesday, January 18th, 2017

யாழ்.மாவட்ட பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்துக்கு விண்ணப்பிப்போரில் பெரும்பாலானவர்கள் அரச வேலைவாய்ப்பை எதிர்பார்க்கின்றனர் என த் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மாவட்டச் செயலகத்தின் மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் கீழ் மாவட்ட பொதுமக்கள் தொழில் சேவை நிலையம் இயங்குகின்றது. 2015-2016 ஆண்டு காலப்பகுதியில் 12ஆயிரத்து 819 பேர் வேலை வாய்ப்புகளுக்காக வேலைவாய்ப்புத் திணைக்களத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் தனியார் துறை வேலை வாய்ப்பை எதிர்ப்போரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

விண்ணப்பித்தவர்களில் 1,912பேருக்கான வேலை வாய்ப்புக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. ஆயினும் 494பேரே அவற்றில் இணைந்துள்ளனர். விண்ணப்பிப்பவர்களில் பெரும்பாலானோர் அரச வேலை வாய்ப்பையே எதிர்பார்க்கின்றனர் என்று மாவட்ட மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

job-puzzle

Related posts: