நீதி வழங்கல் பொறிமுறையை ஏற்படுத்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Thursday, June 22nd, 2017

நிலைமாறுகால நீதி வழங்கல் பொறிமுறையை ஏற்படுத்த இலங்கை அரசாங்கமும், சர்வதேச நாடுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது

பிரித்தானியாவில் இயங்கும் உலக தமிழர் அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் நீதித்துறையை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் நீதித்துறையின் சுயாதீனத் தன்மை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் முன்னாள் விசேட அறிக்கையாளர் மோனிகா பின்டோவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ளது

இந்த அறிக்கை குறித்து சகல தரப்பினரும் அவதானம் செலுத்த வேண்டும்பக்கச்சார்பற்றதும், வினைத்திறனானதும் நம்பகத்தன்மையுடன் கூடியதுமான பொறிமுறையை, சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதலுடன் இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது

Related posts: