சில்லறை முறையில் சிகரெட் விற்க விரைவில் தடை!
Thursday, November 24th, 2016வர்த்தக நிலையங்களில் எதிர்வரும் காலங்களில் சில்லறை முறையில் சிகரெட்டுக்களை விற்பனை செய்வதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், plain white சிகரெட் பக்கற்றுக்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சர் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது சிகரெட்டை கட்டுப்படுத்துவது தொடர்பில் 10 யோசனைகள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவின் டி சொய்சாவினால், ராஜித்த சேனாரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related posts:
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையரும் வாக்களிக்க வாய்ப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் மீண்டும் கைது!
மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து - மின்விநியோகத்தில் தடை ஏற்பதாதெனவும் அறிவிப்பு இலங்கை மின்ச...
|
|