எழுத்தறிவற்றோரின் தொகை ஒரு பில்லியன்?

Tuesday, September 6th, 2016

செப்­ரொம்பர் 08 ஆம் திக­தியை சர்­வ­தேச எழுத்­த­றிவு தின­மாக அனுஷ்­டிக்க வேண்­டு­மென 1965 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆறாம் திகதி “யுனெஸ்கோ” பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது.

முத­லா­வது எழுத்­த­றிவு தினம் 1966 ஆம் ஆண்டு அனுஷ்­டிக்­கப்­பட்­டது. எழுத்­த­றிவு தினத்தின் அரை நூற்­றாண்டு நிறைவை இவ்­வாண்டு (2016) எழுத்­த­றிவு தினம் குறிக்­கின்­றது.

தனி மனி­தர்­க­ளுக்கும் சமூ­கங்­க­ளுக்கும் எழுத்­த­றிவின் முக்­கி­யத்­துவம் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற் ப­டுத்­து­வது தான் இத்­தி­னத்தின் நோக்கம்.

உலக நாடு­களின் கல்வி அமைச்­சர்கள் கலந்து கொள்ளும் இவ்­வாண்­டுக்­கான பிர­தான நிகழ்­வினை பிரான்சின் பாரிஸ் நகரில் “யுனெஸ்கோ” ஒழுங்கு செய்­துள்­ளது. கடந்த ஆண்­டு­களைப் போலவே இவ்­வாண்டும் எழுத்­த­றிவு விரு­து­களும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

எழுத்­த­றிவு என்­பது பாரம்­ப­ரி­ய­மாக வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதம் ஆகிய திறன்­களைக் குறிப்பதாக இருந்து வந்­தது. இன்று அதன் வரை­வி­லக்­கணம் விரி­வ­டைந்­துள்­ளது. இன்று அது மொழி, கணிதம் குறி­யீ­டுகள், கணினி ஆகி­ய­வற்றில் திறன் பெற்­றி­ருப்­ப­தையும் மற்றும் புரிந்து கொள்­ளுதல், தொடர்­பாடல், பயன்­தரும் அறி­வினைப் பெற்றுக் கொள்­ளுதல் மற்றும் ஐதீ­க­மான கலா­சாரக் குறி­யீ­டு­களை பயன்­ப­டுத்­துதல் ஆகி­ய­வற்­றையும் குறிக்­கின்­றது.

எழுத்­த­றிவை அபி­வி­ருத்தி செய்யும் நோக்­குடன் மிலே­னிய அபி­வி­ருத்தி இலக்­குகள் மற்றும் பல்வேறு சர்­வ­தேச, தேசிய வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த போதி லும் இன்­ற­ளவும் சர்­வ­தேச சமூ­கத்தின் மிகப் பெரிய சவால்­க­ளி­லொன்­றாக எழுத்­த­றி­வின்மை இருந்து வரு­கின்­றது. “யுனெஸ்­கோ”­வினால் வெளி­யி­டப்­பட்ட மிக சமீ­பத்­திய தக­வ­லின்­படி உலகில் எழுத்­த­றி­வற்­றோரின் தொகை ஒரு பில்­லி­ய­னாகும். உலக சனத்­தொ­கையில் இது 26%. இதில் மூன்­றி­லிரு பங்­கினர் பெண்கள். 98% ஆன எழுத்­த­றிவற்றோர் வளர்­முக நாடு­க­ளி­லேயே உள்­ளனர்.

குழந்­தைகள் – மாண­வ­ரி­டையே எழுத்­த­றிவை வளர்ப்­ப­தற்­கான பெரு­மு­யற்­சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு­கின்­றன. இது தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள ஆய்­வு­க­ளி­லி­ருந்து அரிய தக­வல்கள் தெரி­ய­வந்­துள்­ளன. அவற்றில் சில­வற்றைப் பார்ப்போம்.

ஒரு குழந்தை வாசிக்கத் தொடங்­குமுன் அக்­கு­ழந்தை ஆயிரம் கதை­க­ளை­யா­வது கேட்­டி­ருக்க வேண்டும். வீட்டில் புத்­த­கங்கள் இருப்­பது தந்­தையின் கல்­வித்­த­ரத்தைப் போல் இரு மடங்கு முக்கிய­மா­ன­தாகும். குறை­வான எழுத்­த­றி­வு­டைய பெற்­றோர்­களின் குழந்­தைகள் வாசிப்பில் மோசமாக இருப்­ப­தற்கு 72% ஆன வாய்ப்பு இருக்­கின்­றது. ஐந்து முதல் ஆறு வய­தி­ன­ரான குழந்தைகள் 2,500 முதல் 5,000 சொற்கள் வரை தெரிந்து வைத்­தி­ருத்தல் வேண்டும்.

2008 ஆம் ஆண்டு ஆய்­வொன்றின் படி உல­கெங்­கு­முள்ள கல்­லூரி மாண­வர்­களில் மூன்றில் ஒருவர் ஒவ்­வோ­ராண்டும் பாட­சா­லை­யி­லி­ருந்து இடை­வி­லகிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த இடைக்காலத்தில் இந்த வீதம் குறைந்­தி­ருக்­கின்­றதா? என்­பது தெரி­ய­வில்லை.

இரண்டாம் தரத்தில் ஒழுங்­காக வாசிக்க முடி­யாத ஒரு குழந்­தைக்கு தனது ஆரம்பக் கல்­வியை நிறைவு செய்­வ­தற்கு நான்கில் ஒரு வீத­மான வாய்ப்பே இருக்­கின்­றது. வளர்ச்­சி­ய­டைந்த சில நாடுகளின் நிலை நான்காம் வகுப்பில் திற­மை­யாக வாசிக்க முடி­யா­தோரில் கணி­ச­மானோர் சீர்திருத்­தப்­பள்­ளி­க­ளையோ, சிறைச்­சா­லை­க­ளையோ சென்­ற­டை­கி­றார்கள் என்று அமெ­ரிக்க ஆய்வு ஒன்று தெரி­விக்­கின்­றது. அமெ­ரிக்க சிறைக்­கை­தி­களில் 70% ஆனோர் நான்காம் தரத்­திற்­கு­ரிய வாசிப்புத் திற­னையே உடை­ய­வர்­களாய் இருக்­கின்­றனர். 50% ஆன அமெ­ரிக்­கர்கள் எட்டாந்தரத்திற்கு­ரிய புத்­த­கங்­களை வாசிக்க முடி­யா­த­வர்­க­ளா­க­வே­யி­ருக்­கின்­றார்கள். எழுத்தறிவின் சர்­வ­தேச மட்­டத்தில் அமெ­ரிக்கா 28 ஆம் இடத்தில் இருக்­கின்­றது.

2014 ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வு ஒன்­றி­லி­ருந்து இங்­கி­லாந்தில் 11 வய­து­டைய குழந்தை­களில் ஐந்தில் ஒருவர் திற­மை­யாக வாசிக்க முடி­யா­த­வ­ரா­யி­ருக்­கின்றார் எனத் தெரியவரு­கின்­றது.

கன­டாவில் 42% ஆனோர் அரை எழுத்­த­றி­வு­டை­ய­வர்­க­ளா­கவே கணிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அது மாத்­தி­ர­மின்றி, கடந்த 15 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக அந்­நாட்டு எழுத்­த­றிவு வீதத்தில் பெரி­தான மாற்றங்­க­ளேதும் ஏற்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

ஆசி­யா­வி­லேயே மிக மோச­மான எழுத்­த­றிவு வீதம் இந்­தி­யா­வுக்­கு­ரி­யது. எழுத்­த­றி­வற்­றோரின் தொகை 287 மில்­லியன். இதிலும் பெண்­களின் தொகையே அதி­க­மாகும். உலக எழுத்­த­றி­வற்றோர் தொகையில் இது 37% என “ஒக்ஸ்பாம் (OXFAM)” நிறு­வ­னத்­தகவல் தெரி­விக்­கின்­றது. ஏற்றத் தாழ்வான சமூக, பொரு­ளா­தார வளர்ச்சி மற்றும் பாரம்­ப­ரிய பழக்க வழக்­கங்கள், மூட நம்­பிக்­கைகள் ஆகி­யன இதற்குக் கார­ண­மா­கலாம். வல்­ல­ரசு நிலையில் வளர்ந்து வரு­வ­தாகச் சொல்­லப்­படும் இந்தியா எழுத்­த­றிவில் இந்த நிலையில் இருப்­பது வியப்­புக்­கு­ரி­ய­துதான்.

ஆனால், அமெ­ரிக்க மத்­திய உள­வுத்­துறை முக­வ­ர­மைப்பின் (சி.ஐ.ஏ.) தக­வல்கள் படி இந்­தியா உலக மட்­டத்தில் 124 ஆவது இடத்­திலும் பாகிஸ்தான் 144 ஆவது இடத்­திலும் இருக்­கின்­றன.

சீனாவில் எழுத்­த­றிவை சற்று வித்­தி­யா­ச­மான முறையில் மதிப்­பி­டு­கின்­றார்கள். சீன எழுத்­துக்கள் ஒவ்­வொன்றும் ஒரு குறி­யீ­டாக அமைந்­துள்­ளன. இவ்­வா­றான குறி­யீ­டுகள் 1,500 ஐ கிராமப்புறத்தவர்கள் தெரிந்து வைத்­தி­ருக்க வேண்டும். நகர்ப்­பு­ற­மாயின் அது 2,000 குறி­யீ­டுகள். அவ்வா­றாயின் அவர் எழுத்­த­றி­வுள்­ளவர்.

சீனப்­பு­ரட்­சிக்கு முன் 80% ஆனோர் எழுத்­த­றி­வற்­ற­வர்­க­ளா­யி­ருந்­தார்கள். இன்று 15 – 24 வயதுடையோரில் 99% ஆனோர் எழுத்­த­றி­வு­டை­ய­வர்­க­ளா­யி­ருக்­கின்­றார்கள்.

இலங்­கையின் எழுத்­த­றிவு வீதம் 92 ஆகும். ஆண்கள் 93%, பெண்கள் 91%. ஆண்­க­ளுக்கும் பெண்களுக்­கு­மி­டை­யி­லான வித்­தி­யாசம் 1.9%. சர்­வ­தேச மட்­டத்தில் 83 ஆவது இடத்தில் இருக்கின்றது. 82 ஆவது இடத்தில் மியன்­மாரும் 84 ஆவது இடத்தில் கொஸோ­வாவும் உள்­ளன. இலங்­கையின் நிலை உலகச் சரா­ச­ரி­யிலும் பிராந்திய சராசரியிலும் மேம்பட்டதாகும். இது குறித்து நாம் பெருமை கொள்ளலாம். உலகச் சராசரி 86% என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வடகொரியாதான் எழுத்தறிவில் உலகில் முதலாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடம் லட்வியாவுக்குத்தான். மூன்றாவது இடத்தை அஸர்பைஸ்தானும் கியூபாவும் பகிர்ந்து கொண்டுள்ளன. கடைசியான 160 ஆவது இடத்தில் உள்ளது நைகர் ஆகும்.

16 – 65 வயதினரிடையே மேற்கொள்ளப் பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து உடல்நலக் குறைவுடையோர் குறைவான எழுத்தறிவுடை யோராய் இருப்பது தெரியவந்துள்ளது. எழுத்தறிவுடையோரை விட எழுத்தறி வற்றோர் குறைவாக வாக்களிப்போராய் உள்ளனர் என்பதும் சுவையான தகவலே.

writing_8

Related posts: