வீதியோரக் கடைகளை அகற்றுங்கள்!
Thursday, April 27th, 2017கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் நாளுக்கு நாள் வாகன விபத்துக்கள் அதிகமாகிவருகின்றன. அதற்கு ஒரு காரணமமாகவிருக்கின்ற வீதியோர அங்காடிக்கடைகளை அகற்றுமாறு கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
கல்முனை சாய்ந்தமருது காரைதீவு போன்ற பகுதிகளிலுள்ள சில அங்காடிக்கடைகளுக்கு கடிதங்கள் நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளன.விரைவாக கடைகள் அகற்றப்படவேண்டும் இன்றேல் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !
தேவையான அரச அதிகாரிகளை சேவைக்கு அழைத்துக்கொளள அனுமதி!
கோறளைப்பற்றிலும் அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுப...
|
|