காங்கேசன்துறையிலிருந்து 610 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் – இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிப்பு!

Tuesday, August 24th, 2021

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையிலிருந்து 610 கிலோமீட்டர் தூரத்தில் வங்காள விரிகுடாவில் 5.1 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதனால் இலங்கைக்கு பாதிப்பு இல்லையென வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாரத்ன தெரிவித்துள்ளார்..

இன்று நண்பகல் 12.30 அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

நில அதிர்வினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என பதிவாகிய நிலநடுக்கம் தொடர்பில், புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.

இதனிடையே 5.1 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஆந்திராவில் காக்கிநாடாவின் தென்கிழக்கில் 296 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இன்று அதிகாலை தமிழகத்தின் சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், குண்டூர் மற்றும் திருப்பதி ஆகிய இடங்களிலும் சிறியளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறிருப்பினும் இதனால் உயிர்ச்சேதம் அல்லது சொத்து சேதம் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts:

பூரணப்படுத்திய படிவங்கள் 31 ஆம் திகதிக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும்! - தேர்தல்கள் ஆணைக்குழு!
முல்லைத்தீவுமாவட்டத்தில் மாகாணசபை தேர்தலுக்குரிய எல்லை நிர்ணயத்திற்குரிய கருத்துக்கணிப்பு மாவட்ட செய...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்திற்கமைய யாழ்ப்பாணத்தின் சில நீர் நிலைகளில் 9 இலட்சம் இரால...