எரிவாயுவின் விலையை அதிகரிக்க அனுமதியில்லை !
Tuesday, January 8th, 2019
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.
டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு சமையல் எரிவாயு நிறுவனங்கள் தொடர்ந்தும் கோரி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சகல சந்தர்ப்பங்களில் அவ்வாறான அதிகரிப்பு மேற்கொள்ளப்படாது.
அது தொடர்பான ஆராய்வுகளை மேற்கொண்டே, பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.
Related posts:
சமூக வலைத்தளங்களில் நிவாரண பொருட்கள் சேகரிப்பு : அரசாங்க அதிபரின் அவசர எச்சரிக்கை!
தேர்தல் சட்டமீறல்கள் வீடியோவாக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் – பொலிஸ் தெரிவிப்பு!
நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பின்வாங்க போவதில்லை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிபடத் தெரி...
|
|
|


