இலங்கை வந்த தென் ஆபிரிக்க ஜனாதிபதி!

Friday, September 2nd, 2016

தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜகோப் ஸுமா பயணம் செய்த தென்னாபிரிக்க விஷேட விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

சீனா நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த குறித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக இவ்வாறு தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.இதன்போது, தென்னாபிரிக்க ஜனாதிபதி மற்றும் அவருடன் வந்த 18 பேரும் விமானநிலையத்தின் விஷேட பகுதியில் சிறிது நேரம் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.எரிபொருள் நிரப்பிய பின்னர், அவர்கள் மீண்டும் சீனா நோக்கிய பயணித்துள்ளனர்

 south_african_President_Jacob_Zuma (1)

Related posts: