இலங்கைக்கு 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் கிடைக்கும் – சீனத் தூதரகம் அறிவிப்பு!
Tuesday, June 29th, 20212 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜூலை 2ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு அனுப்பப்படும் எனக் கூறியுள்ளது.
இதேவேளை இலங்கையில் மொடேர்னா தடுப்பூசியை அவசரத் தேவைக்காகப் பயன்படுத்த தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் முன்னாள் ஒலிபரப்பாளருக்கு பாகிஸ்தானில் கௌரவம்!
சோபித தேரரின் மரணம் தொடர்பில் வைத்தியர்களிடம் விசாரணை!
கட்டாரில் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்!
|
|