திடீரென தீப்பற்றி எரிந்த மகிழுந்து : யாழில் பதற்றம்!
Friday, August 17th, 2018ஆனைக்கோட்டை – அரசடி பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மகிழுந்து நேற்றிரவு 8 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
குறித்த சம்பவத்தின் போது மகிழுந்தில் மின் ஒழுக்கு ஏற்பட்டு புகை வெளியேறியுள்ளது. உடனடியாக மகிழுந்தில் பயணித்தவர்கள் இறங்கியுள்ள நிலையில், மகிழுந்து திடீரென தீ பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து யாழ்.மாநகரசபை தீயணைப்பு பிரிவுக்கு மக்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இருப்பினும் மகிழுந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
சூழலின் தரம் குறித்து அவதானம் வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்!
கடல் வழியாக சட்டவிரோதமாக வடபகுதிக்கு வருவோரால் வடக்கில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் – எச்சரிக்கிறத...
அனைத்து நடவடிக்கையிலும் வெற்றியடைந்துள்ளோம் - கொரோனா தொற்று கட்டுப்படுத்தல் தொடர்பில் இராணுவத் தளப...
|
|