இலங்கைக்கு 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் கிடைக்கும் – சீனத் தூதரகம் அறிவிப்பு!

2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜூலை 2ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு அனுப்பப்படும் எனக் கூறியுள்ளது.
இதேவேளை இலங்கையில் மொடேர்னா தடுப்பூசியை அவசரத் தேவைக்காகப் பயன்படுத்த தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புகையிரத உழியர்களது வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு?
வடக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடல்!
துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!
|
|