இரு தினங்களில் 7 பேர் விஷக்கடிக்கு இலக்கு – தென்மராட்சியில் அச்சம்!

Thursday, May 31st, 2018

தென்மராட்சியில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் ஏழு பேர் விஷக்கடிக்கு இலக்காகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீசாலையைச் சேர்ந்த 57 வயதான ந.நடேசன், நுணாவிலைச் சேர்ந்த 11 வயதான அ.நற்குமரன் ஆகிய இருவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையிலும் மீசாலையைச் சேர்ந்த 24 வயதான க.சுதாயினி, கைதடியைச் சேர்ந்த 14 வயதான சி.சிந்துஜன், கச்சாய் வீதி சாவகச்சேரியைச் சேர்ந்த 36 வயதான பா.சசிக்காந்தன், கொடிகாமத்தைச் சேர்ந்த 65 வயதான அ.செல்லம்மா ஆகியோர் இனந்தெரியாத விஷக்கடிக்கு இலக்கான நிலையிலும் வரணிப் பகுதியைச் சேர்ந்த 75 வயதான மு.தம்பிராஜா அதிகளவான குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையிலும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts: