இருதய நோயினால் அவதியுறும் சிறுவனின் மருத்துவத்திற்கு உதவிகோரும் ஒரு ஏழை தாய்!

Sunday, September 11th, 2016

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவின் நாவிதன்வெளிக் கிராமத்தில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பிரதீபன் டிலுக்ஸன் (வயது 4) என்ற சிறுவன் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனுடைய இருதய சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. பணத்தொகையை முழுமையாக செலுத்தி மருத்துவ வசதிகள் செய்ய முடியாத நிலையில் இக் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனா். நல்லுள்ளம் கொண்ட உறவுகள் எவராயினும் எனது குடும்ப நிலை கண்டும் எனது சிறுவனை கருத்தில் கொண்டும் எமக்கு முடிந்தளவு உதவியை செய்தும்படி தாயார் கேட்டுக் கொண்டுள்ளார்.

mother01

Related posts: