வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று ஆலமரத்துடன் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மகள் படுகாயம்
Monday, March 28th, 2016இளவாலை பெரியவிளான் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை( 27-03-2016) மாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று ஆலமரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த திரவியம் அகிலேஸ்வரன் (வயது -36) என்பவரே உயிரிழந்தவராவார்.அவரது மகளான அ .அகிலா (வயது -14) என்ற சிறுமி படுகாயமடைந்துள்ளார்.
நெஞ்சுவலியால் துடித்த மகளை மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றபோதே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
கதிர்காமம் சென்ற பேருந்து விபத்து!
சமூகத்தின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பு – 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையில் ...
மன்னாரில் 8 ஆயிரத்து 700 குடும்பங்களுக்கு மாத்திரமே 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் - மாவட்ட அ...
|
|