இந்திய மீனவர்களுக்கு 16 ஆம் திகதிவரை  விளக்கமறியல் நீடிப்பு

Tuesday, May 3rd, 2016

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால், (03) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் ம் 5ஆம் திகதி நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் 1 விசைப்படகுடன் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி நெடுந்தீவுக்கு வடக்குப் பகுதியில் 1 விசைப்படகுடன் கைது செய்யப்பட்ட ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் ஆகியோரின் விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிரந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: