FAO சர்வதேச அமைப்பின் உதவிப் பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

உணவு பாதுகாப்பு மற்றும் விவசாய மேம்பாடு தொடர்பான சர்வதேச அமைப்பின் (FAO) உதவிப் பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின்போது கடற்றொழில் அமைச்சு திருத்தம் செய்யும் சட்ட வரைபு தொடர்பாகவும், மீன் வளர்ப்பு , கடற்பாசி மற்றும் கடலுணவு சார் உற்பத்திகளுக்கு FAO அமைப்பின் ஊடாக உதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடரபாக கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பின்போது கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த, அமைச்சின் செயலாளர், நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம்,சீனோர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர் ஆகியோரும், FAO நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகளான நளின் முனசிங்க மற்றும் Dr பாலித ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
தமிழ் மக்களது நிரந்தர விடியலுக்கானதாகவே வழி முறைகள் அமையவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
ஊர்காவற்துறை தள வைத்தியசாலைக்கான உயிர் காக்கும் கருவிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வைத்தியசாலை...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்!
|
|