அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்!

Friday, October 27th, 2023

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்  இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமானது.

குறித்த கூட்டம் ஒருங்கிணைப்பு குழு தலைவர்களான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் தலைமையில் ஆரம்பமானது.

இக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், அதிகார சபைகள், திணைக்களங்களை பிரதிநிதித்தும் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதனிடையே பூநகரி குள புனரமைப்பு மற்றும் சூரியசக்தி மின்னுற்பத்தி திட்டம் தொடர்பான விரிவான விளக்கம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பின் ஸ்ரீதரன் மற்றும் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்களுக்கு, திட்டத்தை அமுலாக்கவுள்ள Sunpower Construction (Pvt) Ltd இனரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


வடமராட்சி பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் நேரில் ஆராய்வு!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயாரது புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ்...
அமைச்சர் டக்ளஸின் அறைகூவலுக்கு தமிழ் தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு - காலம் தாழ்த்தாது செயலில் இறங்க...