வளங்களை அள்ளித் தரும் கடல் சவால்களையும் சந்திக்க வைக்கிறது – காலநிலை மாற்றம் தொடர்பான கொழும்பு மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, March 15th, 2024

எல்யைற்ற வளங்களை அள்ளித் தரும் கடலானது பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வைப்பதாக கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் பாத் பைண்டர் அமைப்பு மற்றும் மனிதநேய கலந்துரையாடலுக்கான மத்திய நிலையத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட காலநிலை மாற்றம், மனிதநேய முகாமைத்துவம் மற்றும் பொதுக் கொள்கை தொடர்பான வட்டமேசை மாநாட்டில் உiயாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கையில் கடற்றொழிலாளர்கள் குறிப்பாக சிறிய அளவிலான கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அவலநிலை தொடர்பாக இம் மாநாட்டில் அவதானம் செலுத்தப்படுவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேநேரம் எமது நாட்டுக்கு புராதனப் பெருமை மிகுந்த கடலுடன் தொடர்புடைய வரலாறு உள்ளது. ஏராளமன மீன் வளங்களையும் அது எமது கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி வருகிறது. இருந்தாலும் கடலானது உடனடியாக தீர்வு காணப்பட வேண்டிய சவால்களையும் அது ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக மீன்கள் அருகி வருவது தொடர்பாக நாம் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. அதிகளவில் மீன்களைப் பிடித்தல், சமுத்திரம் வெப்பமடைதல், கடல் மாசடைதல், கடலின் சுற்றாடல் பாதிப்படைதல், அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குப்படுத்தப்படாத சட்டவிரோத கடற்றொழில் முறைகள் இதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஐ.நா. உணவு மற்றும் விவசாய கடற்றொழில் அமைப்பின் (FAO) அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இது எமது கடற்றொழிலளர்களின் வாழ்வாதாரத்தை மட்டும் பாதிக்க வில்லை. கடலின் ஒட்டுமொத்த சுற்றாடலின் ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறித்த  பிரச்சினையை வெற்றி கொள்வதற்காக நான் நீர் வேளாண்மை மற்றும் கடல் வேளாண்மை மூலம் மீன் உற்பத்தியை அதிகரிப்தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். இந்த சுற்றாடல் நலன் சார்ந்த நடவடிக்கைகளால் கடலுணவு உற்பத்தி அதிகரித்துள்ளது.

இதற்கு புறம்பாக கடந்த பல வருடங்களாக பாரிய பிரச்சினைகளை எமது கடற்றொழில் சந்தித்து வருகிறது. குறிப்பாக வடமாகாண கடற்பிராந்தியத்தில் இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறிய சட்டவிரோத நடவடிக்கள் அதிகரித்து வருகிறது. இதனால் கடலின் சுற்றாடல், உயிரினங்கள், மீன்களின் சினை முட்டைகள், பவளப்பாறைகள் அழிக்கப்படுவதுடன் இலங்கை கடற்றொழிலாளர்களின் மீன்பிடி படகுகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது.

இதேநேரம் பாரிய இந்திய இழுவைப்ப படகுகளின் தொடர்ச்சியான வருகை காரணமாக இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவர்கள் மீன்கள் மற்றும் இறால்களை மற்றும் பிடிப்பதில்லை மீன் குஞ்சுகளையும்; அழித்து விடுகிறார்கள்.

இதனிடையே எமது நாடு இந்து சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்தின் கேந்திர நிலையத்தில் அமைந்திருப்பதால் கடல்பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களையும்; எதிர்கொண்டு வருகிறோம். சட்டவிரோத ஆள்கடத்தல், போதைப் பொருள் கடத்தல் மற்றும் கடற்கொள்ளை என்பன நாங்கள் எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தல்களாகும். துரதிஷ்டவசமாக ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறை இவ்விடயத்தில் நாங்கள் செயற்படுவதற்கு தடையாக உள்ளது.

காலநிலை மாற்றமானது தற்போது மற்றொரு அச்சுத்தலாகும். கடல் நீர் மட்டம் அதிகரிப்பதால் எமது கரையோர கடற்றொழில் சமூகம் பாதிக்கப்படும் அதேவேளை கடல் வெப்படைதல் கடலின் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நிலைபேறான கடற்றொழிலை உறுதிப்படுத்துவதற்கும் கடலரிப்பபை தடுப்பதற்கும் செயல் திறன்மிக்க அணுகுமுறை தேவை.

இலங்கை பொருளதாரத்தில் முதுகெலும்பாக கடற்றொழிலை மாற்றுவதற்காக நீலப் பொருளாதார திட்டத்தை அமுல்படுத்துவதற்கான கொள்கைகளை நாங்கள் வகுத்துள்ளதுடன் அதற்காக நிபுணர் குழுவையும் நாங்கள் நியமித்துள்ளோம்.

இதேவேளை சட்டவிரோத  மற்றும் அறிக்கையிடப்படாத கடற்றொழிலை முறைகளை தடுப்பதற்காக எனது அமைச்சு புதிய கடற்றொழில் வரைபை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இச் சவால்கள் வெற்றி கொள்ள முடியாதவை அல்ல. கூட்டு நடவடிக்கை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் வளமான எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னே முடியும்.

இதன் பொருட்டு நாங்கள் கடல் உட்கட்டமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பம், பிராந்திய ஒத்துழைப்பை பலப்படுத்தல், நிலைபேறான கடற்றொழில் நடவடிக்கைகளை ஊக்குவித்தல் மற்றும் நவீன தொழில் நுட்பம் முயற்சிகளை ஊக்கு வித்தல் ஆகிய முக்கிய மூலோபாயங்களை இனங்கண்டுள்ளோம்.

அத்துடன் தூரநோக்கு மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய செயற்பாடுகளால் இந்த சவால்களை எம்மால் வெற்றிகொள்ள முடியும். எமது கடலை பாதுகாப்பதன் மூலமும் நிலைபேறான கடல் வளத்தை உறுமதிப்படுத்துவதன் வாயிலாகவும். புதுமைகளை உள்வாங்குவதன் ஊடாகவும் குறித்த சவால்களை எமது வளமான எதிர்காலத்திற்கான வாய்ப்புகளாக இதனை நாம் மாற்றிக் கொள்ளலாம்.

அதனடிப்படையில் இந்த சவால்கள் தொடர்பாக அவதானம் செலுத்துமாறு இங்கு கூடியிருப்போரிடம் வேண்டிக் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்வில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் கடற்றொழில் வரைபின் பிரதியொன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பாத் பைண்டர் அமைப்பின் தலைவர் மற்றும் தூதுவர் பேர்னாட் குணதிலக்கவுக்கு  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

வடக்கின் சுகாதாரத்துறை முன்னேற்றம் குன்றியநிலையில் காணப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட...
மக்களின் வாழ்வியலை ஆரோக்கியமாகுவதன் ஊடாக மகிழ்ச்சி காண விரும்புகிறோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா த...
சிந்தன் தோழரின் புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்சிக் கொடி போர்த்தி இறுதி அஞ்சலி மரியாதை!