வடபகுதி மக்கள் கடலட்டை வளர்ப்பில் ஆர்வம் – மூலப் பொருட்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Thursday, March 3rd, 2022

கடலட்டை வளர்ப்பு, பாசி வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மைச் செயற்பாடுகளில் வடக்கு மாகாண மக்கள் ஆர்வம் காண்பித்து வருகின்ற நிலையில், அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களையும் மூலப் பொருட்களையும் ஏற்பாடு செய்வது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, கடலட்டைப் பண்ணைகளுக்கான குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள், ஓலைத்தொடுவாயில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை இனப் பெருக்க நிலையத்தினை வினைத்திறனுடன் செயற்படுத்துதல் மற்றும் இறால் பண்ணைகள், பாசி வளர்ப்பு போன்றவற்றில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

Related posts:

இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தரப் பிரைஜைகள் அல்ல - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.வலியுறுத்த...
கடல்சார் அனர்த்த முகாமைத்துவ நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அபிவிருத்திப் பணிகள் - கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ...

யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் எமது மக்களின் அபிலாசைகளையே வலியுறுத்துவோம் - வவுனியா மாநாட்டில் செயலாள...
வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்...
விவசாயப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் தாவரத் தடுப்புக் காப்பு நிலையம் அமைச்சர் டக்ள...