வடபகுதி மக்கள் கடலட்டை வளர்ப்பில் ஆர்வம் – மூலப் பொருட்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!
Thursday, March 3rd, 2022கடலட்டை வளர்ப்பு, பாசி வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மைச் செயற்பாடுகளில் வடக்கு மாகாண மக்கள் ஆர்வம் காண்பித்து வருகின்ற நிலையில், அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களையும் மூலப் பொருட்களையும் ஏற்பாடு செய்வது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, கடலட்டைப் பண்ணைகளுக்கான குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள், ஓலைத்தொடுவாயில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை இனப் பெருக்க நிலையத்தினை வினைத்திறனுடன் செயற்படுத்துதல் மற்றும் இறால் பண்ணைகள், பாசி வளர்ப்பு போன்றவற்றில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
Related posts:
சைவத்திற்கும் தமிழுக்கும் வாழ்நாள் முழுவதும் பெரும் தொண்டாற்றிய பெருமகனார் சிற்சபேசக் குருக்கள் அனுத...
அரசியல் உரிமைக்கு தீர்வைக் காணுங்கள் தேசிய நல்லெண்ணம் தானாக உருவாகும் - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட...
சட்ட விரோதமான மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
|
|