வடக்கு – கிழக்கில் உயிரிழந்த ஊடகவியலாளர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு விN~ட திட்டம் வேண்டும்!

Sunday, December 10th, 2017

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த ஊடகவியலாளர்களது குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை ஈட்டிக் கொள்ளக்கூடிய வகையில் ஒரு விN~ட திட்டம் என்ற அடிப்படையில் ஒரு நிதியுதவித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்,

வடக்கு – கிழக்கு ஊடகவியலாளர்களுக்கென ஒரு வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கௌரவ அமைச்சர் மங்கள சமரவீர அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கிலே செயற்பட்டு வருகின்ற சில ஊடக நிறுவனங்கள் – அந்த நிறுவனத்தில் தொழில் செய்கின்ற நிலையில் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அல்லது இறக்க நேரிடும் ஊடகவியலாளர்களுக்கென்று எவ்வித கொடுப்பனவுகளையும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்காத ஒரு நிலையே காணப்படுகின்றது.

எனவே, தனியார் ஊடக நிறுவனங்கள் என்ற போதிலும், ,வற்றில் பணி புரிகின்ற ஊடவியலாளர்களது நலன்களைப் பேணத்தக்க சில ஒழுங்கு விதிகளை இந்த நாட்டின் ஊடகத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எடுக்க வேண்டும் என்றும் கௌரவ அமைச்சர் மங்கள சமரவீர அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், அரச தொலைக் காட்சிகளிலும், வானொலிகளிலும் தமிழ்ச் சேவைகளில் தேசிய கீதம் ஒலி – ஒளிபரப்பப்படும்போது, அதனைத் தமிழ் மொழியில் ஒலி – ஒளிபரப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

Related posts:

எவ்வாறானதொரு சூழ்நிலையாயினும், அதனை மக்களின் நலன்களிலிருந்து எதிர்கொள்வோம் - செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
பண்டத்தரிப்பு சாந்தை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் -  டக்ளஸ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் வவுனியா பல்கலைக்கழகம் அங்குரார்ப்பனம் – அமைச்சர்களான டக்ளஸ் தேவ...

மக்களுக்காக அரசாங்கம் வகுக்கின்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம...
இந்து சிவாச்சாரியர்களுக்கு தேவையான அங்கீகாரம் வழங்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!
முற்கொம்பன் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு!