ல்அமைச்சர் டக்ளஸ் பிரசன்னத்துடன் வலி வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கானாள அளவீட்டு பணிகள் ஆரம்பம் !

Monday, June 19th, 2023


………
வலி வடக்கிக் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீ்டுப் பணிகள்ல், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்று ஆரம்பமாகியுள்ளது.

2013 ஆண்டு காலப் பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக அரசுடமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அடிப்படையில் அரச காணிகளிகளாக சுவிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட   சுமார் 6300 ஏக்கர் காணிகளில் கணிசமானவை தற்போது விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

எனினும், குறித்த காணிகள் சட்ட ரீதியாக இப்போதும் அரச காணிகளாகவே  காணப்படுகின்றமையினால், 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட  வர்த்தமானியை மீளப் பெறுகின்ற வகையில் புதிய வர்த்தமானி வெளியிட வேண்டியிருக்கின்றது.

இதுதொடர்பாக, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் விரிவாக கலந்துரையாடிய நிலையில், குறித்த 2013 வர்த்தமானியை மீளப்பெறுவதற்கும், தற்போதும் விடுவிக்கப்படாமல் இருக்கின்ற சுமார் 2900 ஏக்கர்  காணிகளில் முடிந்தளவு காணிகளை விடுவிப்பதற்கும்  காணி அளவீடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில், ஜனாதிபதி செயற்குழாம் பிரதானி சாகல இரத்நாயக்கா தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தின் தீர்மானப்படி இன்று அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


உரிமைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் விவேகமற்ற அரசியல் தலைமைகளினால் வழிமாறிச் சென்று மக்களை கையேந்து...
தீவகத்தில் கடல் வேளாண்மையை மட்டுமல்லாது நில வேளாண்மையையும் மேம்பாடு காணச்செய்வேன் – வேலணையில் அமைச்ச...
கிளிநொச்சி மக்கள் எதிர்கொண்டுவந்த அதிகளவான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ்!