கடும் வறட்சியான காலநிலை – நீர் ஆவியாவதை கட்டுப்படுத்தும் வகையில் சிறுதானிய செய்கை மேற்கொள்வது தொடர்பில் கவனம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, April 19th, 2024

கடும் வறட்சியான காலநிலை காணப்படுவதால் அதிக நீர் ஆவியாகின்றது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் சிறுதானிய செய்கை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

நெற்செய்கைக்கு அதிக நீர் தேவைப்படுகின்றது. இதனால் அதிகளவிலான நீர் ஆவியாகி வீணாகின்றது. அதனை தவிர்க்கும் வகையில் 1000 ஏக்கரில் சிறுதானிய செய்கையை மேற்கொள்வது தொடர்பில் முதல் கட்டமாக ஆராய்ந்திருந்தோம். அதற்கு சாதகமான சூழல் காணப்படுகின்றது. அத்துடன் அதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது.

அது தவிர கிளிநொச்சி சேவைச் சந்தையின் குறைபாடுகள், பூநகரி பிரதேச சபை ஊடாக மணல் விற்பனை நிலையம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

கிடைக்கும் மணல் வளம் நியாயமில்லாமல் மக்களிற்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றது அதனை கட்டுப்படுத்தவே இவ்வாறு  நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இராகுகாலம் என்பதால் பொன்னாவெளி சிமெந்து தொழிற்சாலைக்கு செல்லவில்லை என கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் பொன்னாவெளி சம்பவம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

மேலும் பொன்னாவெளிக்கு நான் செல்லவில்லை. பொருத்தமான நேரம் பார்த்து செல்ல வேண்டும். இப்பொழுது ராகு காலம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமிழக முதலமைச்சர், புதுச்சேரி முதலமைச்சர் ஆகியோர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் தேர்தல் இடம்பெறுகின்றது. அந்த தேர்தலிற்காக கச்சதீவு விவகாரம் பேசப்படுகின்றது. நாட்டுக்குள் உள் வருபவர்களை கண்காணிக்க  காண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

அதனை நாங்கள் வரவேற்கின்றோம். இதுவரை காலமும் இலங்கை கடற்படை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடற்படையினர் எடுத்த நடவடிக்கையை பல்வேறு விதமாக பேசினர்.

ஆனால், இந்தியாவே இவ்வாறு கண்காணிப்பில் ஈடுபட்டால் நிலைமை சிறந்ததாக அமையும். தமிழக முதலமைச்சர் மற்றும் புதுக்சேரி முதலமைச்சர் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு என்னை அழைத்துள்ளனர்.

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை கட்டுப்படுத்துவது தொடர்பில் உறுதியளிக்கும் பட்சத்திலேயே குறித்த சந்திப்பிற்கு செல்வேன் என கூறியுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: