முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் – புதிய பாதீட்டு உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 18th, 2016

புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் எதுவிதமான வாழ்வாதார வசதிகளும் இன்றி நீண்டகாலமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவதானத்தில் கொண்ட விஷேட திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இச் சபையில் நான் முன்வைக்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களையும் புதிய தொழில் முயற்சியாளர்களையும் ஊக்குவிக்கக்கூடிய பல திட்டங்கள் காணப்படுகின்றன. இத்திட்டங்களில் இயலுமானவரை மேற்படி முன்னாள் போராளிகளையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

01

Related posts:

சம்பூரில் காணி, நிலங்களை விடுவித்தோம் என மார்தட்டிக் கொள்வதில் பயனில்லை மக்கள் மீள்குடியேற என்ன செ...
ஓய்வுபெற்றுச் செல்லும் யாழ் மாவட்ட தனியார் போக்குவரத்து சபை ஊழியர் இராசரத்தினம் அவர்களை பொன்னாடை போர...
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

நச்சுக் காற்றை புறந்தள்ளுங்கள் ஆரோக்கியமான காற்றை பெற்றுத் தருகிறேன் - கிளி. மக்களுக்கு அமைச்சர் டக்...
கொரோனா தடுப்பூசி வழங்கு நிலையங்களை நேரில் சென்று கண்காணிக்கும் அமைச்சர் டக்ளஸ் – மக்களுக்கு தடுப்பூச...
அமைச்சர் டக்ளஸின் மற்றுமொரு கனவும் நனவானது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்ச...