யாழ் வந்த விதை உருளைக்கிழங்குகளில் நோய் தொற்று – அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் – கவனம் செலுத்துமாறும் கோரிக்கை!

Sunday, December 17th, 2023

கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட விதை உருளைக்கிழங்கு நோய் தொற்றுக்குள்ளாகியமை தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்..

யாழ்ப்பாண மாவட்ட உருளைக்கிழங்கு விவசாயிகளுக்காக கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட சுமார் 16 மில்லியன் ரூபாய் பெறுமதியான 21 மெட்ரிக் ரொன் விதை உருளைக்கிழங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள களஞ்சியம் ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் உடனடியாக விவசாய அமைச்சர் மஹிந்த அமர வீரவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன் குறித்த  விடையம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்..

இதன்போது பதிலளித்த விவசாய அமைச்சர் அமரவீர,  குறித்த விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாக தனக்கு உறுதியளித்ததாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயம் தொடர்பில் தானும் அதிக கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

தமிழரது சாத்வீக எண்ணங்களை அரசுகள் ஏற்றிருந்தால் இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்காது  - நாடாளுமன...
அவசரகாலச் சட்டம் மனித முகங்களைக் கொண்டு செயற்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
அறம் வென்று, அநீதி தோற்ற தீபாவளித்திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம் – தீபாவளி வாழ்த்துச் செய்தியில்...